முன்னாள் முதல்வர்கள் ஆயுட்காலம் வரை அரசு பங்களாக்களை பயன்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
முன்னாள் முதல்வர்கள் தங்களது ஆயுட்காலம் வரை அரசு பங்களாக்களை பயன்படுத்திக் கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புது தில்லி: முன்னாள் முதல்வர்கள் தங்களது ஆயுட்காலம் வரை அரசு பங்களாக்களை பயன்படுத்திக் கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2004ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், நீதிபதி அனில் ஆர் தாவே தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இதில், எந்த அரசு பங்களாக்கங்களையும், பதவி இழந்தவர்கள் இரண்டு அல்லது 3 மாதங்களில் காலி செய்துவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
நீதிபதிகள் யு.யு. லலித் மற்றும் எல். நாகேஸ்வர ராவ் ஆகியோரையும் கொண்ட அமர்வு அளித்துள்ள இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில், தங்கள் ஆயுட்காலம் வரை அரசு பங்களாக்களை பயன்படுத்திக் கொள்ள யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
Advertisement
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, முன்னாள் முதல்வர்கள் மற்றும் தகுதியற்றவர்களுக்கு அரசு பங்களாக்களை ஒதுக்குவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.