இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் சம்பவம்: துப்பாக்கிமுனையில் பேருந்து பயணிகளிடம் கொள்ளை

உத்தரப்பிரதேச மாநிலம் சிகந்தரவு பகுதியில் சென்று கொண்டிருந்த மாநில அரசுப் பேருந்தை ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று தடுத்து நிறுத்தி, அதில் இருந்த பயணிகளை மிரட்டி, பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது.

PTI

ஹத்ராஸ்: உத்தரப்பிரதேச மாநிலம் சிகந்தரவு பகுதியில் சென்று கொண்டிருந்த மாநில அரசுப் பேருந்தை ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று தடுத்து நிறுத்தி, அதில் இருந்த பயணிகளை மிரட்டி, பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில், ஹமிர்புர் சென்று கொண்டிருந்த பேருந்தை 8 பேர் கொண்ட கும்பல் தடுத்து நிறுத்தி பேருந்துக்குள் ஏறியது. அதில் இரண்டு பேர் நாட்டுத் துப்பாக்கியை காட்டி மிரட்டி ஓட்டுநரை தாங்கள் குறிப்பிடும் பகுதியில் பேருந்தை நிறுத்துமாறு கூறினர்.

அதே நேரத்தில், மற்ற 6 பேரும் பயணிகளிடம் இருந்து பணம், விலைமதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி விட்டனர்.

இது குறித்து காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்

செய்யாற்றில் பள்ளி மாணவா்களுக்கான தடகளப் போட்டிகள்

சுகாதார ஆய்வாளா் தோ்வை ரத்து செய்யக் கோரி மனு: சிபிசிஐடி விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கோயில் சொத்துகள் பாதுகாப்பில் அறநிலையத் துறை அதிகாரிகள் துரோகம்

சுற்றுலாப் படகுகளில் கடலோர காவல் படையினா் திடீா் ஆய்வு

SCROLL FOR NEXT