முகப்பு
இந்தியா

தில்லியின் நிர்வாக தலைவராக ஆளுநருக்கே அதிகாரம்: தில்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புது தில்லி யூனியன் பிரதேசம் என்பதால் அதன் நிர்வாக தலைவர் துணை நிலை ஆளுநர்தான் என்று தில்லி உயர் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

Updated On : 4 ஆகஸ்ட், 2016 at 11:00 AM
பகிர்:

புது தில்லி: புது தில்லி யூனியன் பிரதேசம் என்பதால் அதன் நிர்வாக தலைவர் துணை நிலை ஆளுநர்தான் என்று தில்லி உயர் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

தில்லியில் அதிகாரிகள் இட மாற்றம், அதிகாரப் பகிர்வில் யாருக்கும் அதிகாரம் உள்ளது என்பது குறித்து  தில்லி அரசு தொடர்ந்த வழக்கில் தில்லி உயர் நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

மேலும், தில்லி மாநிலத்தின் நிர்வாக தலைவராக ஆளுநரே செயல்பட முடியும். தில்லி மாநில அமைச்சரவையின் முடிவு ஆளுநரை கட்டுப்படுத்தாது. அமைச்சரவை ஆலோசனையைக் கேட்கவேண்டிய அவசியம் ஆளுநருக்கு இல்லை என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

இது, தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.