முகப்பு
இந்தியா

பிகார் பொதுத் தேர்வில் முறைகேடு: முக்கியக் குற்றவாளி கைது

பிகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட பொதுத் தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட நபரை மேற்கு வங்க சிஐடி மற்றும் பிகார் காவல்துறை இணைந்து கைது செய்துள்ளது.

Updated On : 10 ஆகஸ்ட், 2016 at 12:41 PM
பகிர்:

கோல்கத்தா: பிகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட பொதுத் தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட நபரை மேற்கு வங்க சிஐடி மற்றும் பிகார் காவல்துறை இணைந்து கைது செய்துள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே கைதானவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் ஜின்ஜின்ஜிராபஜார் பகுதியில் பதுங்கியிருந்த விகாஷ் குமார் (39) கைது செய்யப்பட்டார்.

சிஐடி மூத்த அதிகாரி திலிப் அதக் அளித்த தகவலின் அடிப்படையில், பிகார் கல்வித் துறையின் தேர்வுப் பிரிவில் கிளர்க் மற்றும் ஸ்டோர் கீப்பராக பணியாற்றி வந்த விகாஷ் குமார்தான் இந்த குற்றத்தில் பின்னணியில் முக்கிய நபராக இருந்து செயல்பட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

Advertisement

இவர், மாணவ, மாணவிகளின் விடைத்தாள்களை மாற்றுவதற்கு ஒவ்வொருவரிடம் இருந்தும் 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக பெற்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.