மத்தியப் பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி, 6 பேர் காயம்
மத்தியப் பிரதேசத்தில் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அலிராஜ்பூர்: மத்தியப் பிரதேசத்தில் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அலிராஜ்பூர் மாவட்டத்தில் நேற்றிரவு 12 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பும் போது பேருந்து நிலைதடுமாறிக் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர், 6 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று பிரதமர் மோடி சுதந்திர போராட்ட வீரர் சந்திரசேகர ஆசத் பிறந்த இடமான பாப்ராவில் அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement