இந்தியா

பிஎஸ்என்எல் அனைத்து அழைப்புகளும் இன்று இலவசம்: மத்திய அரசு

தினமணி

புது தில்லி:  சுதந்திர தின சிறப்பு சலுகையாக, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தரைவழி இணைப்புகளில் (லேண்ட்லைன்) இருந்து அனைத்து அழைப்புகளையும் திங்கள்கிழமை (ஆக.15) இலவசமாக மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பிஎஸ்என்எல் தரைவழி இணைப்பில் இருந்து, எந்த நிறுவனத்தின் செல்லிடப் பேசி, மற்றும் தரைவழி இணைப்புகளுக்கு திங்கள்கிழமை இலவசமாக எந்தக் கட்டுப்பாடுகளுமின்றி இலவசமாக அழைக்கலாம்.
ஞாயிறுதோறும் இலவசம்: இதே வசதியை ஞாயிற்றுக்கிழமை தோறும் பெறலாம் என்று மனோஜ் சின்ஹா குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பிஎஸ்என்எல் தலைமை மேலாண் இயக்குநர் அனுபம் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், "அனைத்து பிஎஸ்என்எல் இணைப்புகளுக்கும் இந்த இலவச அழைப்பு வசதி பொருந்தும்; இதுதவிர, இரவு நேரத்தில் தரைவழி இணைப்பில் இருந்து இலவசமாக அழைப்புகளும் மேற்கொள்ளும் வசதியும் தொடர்ந்து அமல்படுத்தப்படும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT