முகப்பு
இந்தியா

நாக்பூரில் கொதிகலன் வெடித்து 17 பேர் காயம்

நாக்பூரில் உள்ள தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் கொதிகலன் ஒன்று வெடித்து விபத்துக்குள்ளானதில் 17 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.

Updated On : 3 டிசம்பர், 2016 at 9:36 AM
பகிர்:

நாக்பூர்: நாக்பூரில் உள்ள தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் கொதிகலன் ஒன்று வெடித்து விபத்துக்குள்ளானதில் 17 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்ப்டுள்ளதாவது:
நாக்பூர் புறநகர் பணியில் உள்ள தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் நேற்று இரவு தொழிலாளர் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது, திடீரென கொதிகலன் ஒன்று வெடித்துள்ளது. இதில், பணியில் இருந்த 17 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனை மற்றும் மாயோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.