இந்தியா

ஏர்செல்- மாக்சிஸ் வழக்கு: மாறன் சகோதர்கள் மீதான வழக்கு விசாரணை ஜனவரி 9-க்கு தள்ளிவைப்பு!

ஏர்செல்- மாக்சிஸ் வழக்கில்,  மாறன் சகோதர்கள் மீது குற்றசாட்டு பதிவு செய்வது தொடர்பான வழக்கு விசாரணையை ஜனவரி 9-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுதில்லி: ஏர்செல்- மாக்சிஸ் வழக்கில்,  மாறன் சகோதர்கள் மீது குற்றசாட்டு பதிவு செய்வது தொடர்பான வழக்கு விசாரணையை ஜனவரி 9-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏர்செல் நிறுவனத்திற்கு 2G லைசென்ஸ் தருவதற்காக, அந்நிறுவனத்தின் பங்குகளை மிரட்டி மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க வைத்ததாகவும், அதன் மூலம் தங்களுடைய குடும்ப நிறுவனமான சன் குழுமத்தில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ய வழி வகுத்ததாகவும் கூறி, அன்றைய மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது அண்ணனும், சன் குழும மேலாண்மை இயக்குநருமான கலாநிதிமாறன் ஆகிய இருவர் மீதும் சி.பி.ஐ வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தொடர்பான வழக்கை விசாரித்த சி.பி.ஐ நீதிமன்றம், தீர்ப்பு வழங்குவதை அடுத்த மாதம் 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

ஏழரைச் சனியில் சனி கிரகத்துடன் ஏற்படும் பயண அனுபவம்!

தென்னாப்பிரிக்காவின் துரந்தர் யார்? பயிற்சியாளர் பிரசன்னா கிளப்பிய புதிய சர்ச்சை!

SCROLL FOR NEXT