ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை செய்த 20 பேரில் நால்வர் இந்தியர்?
போர் பகுதிகளிலிருந்து தப்பி செல்ல முயன்ற 20 பேரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பொதுவெளியில் கழுத்து அறுத்துக் கொலை செய்தனர். அவர்களில் 4 பேர் இந்தியர்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
போர் பகுதிகளிலிருந்து தப்பி செல்ல முயன்ற 20 பேரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பொதுவெளியில் கழுத்து அறுத்துக் கொலை செய்தனர். அவர்களில் 4 பேர் இந்தியர்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
போர் நடைபெறும் பகுதிகளிலிருந்து தப்பிச் செல்ல முயன்றதாக இராக் நாட்டின் மோசூல் நகரில் சில நாள்களுக்கு முன்பு ஐஎஸ்ஐஸ் தீவிரவாதிகள் 20 பேரை பொதுமக்கள் முன்னிலையில் கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர்.
கொலை செய்யப்பட்டவர்களில் 4 பேர் இந்தியர்களாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
Advertisement
இதுகுறித்து இந்தியப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இந்தியாவைச் சேர்ந்த 23 பேர் இதுவரை சேர்ந்துள்ளனர். அவர்களில் 6 பேர் சிரியா மற்றும் இராக் நாடுகளில் நடைபெற்ற மோதல் சம்பவங்களில் இறந்துவிட்டனர்.
இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கழுத்தை அறுத்துக் கொலை செய்தவர்களில் இந்தியர்கள் யாரும் உள்ளனரா என்பது குறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.