தில்லியில் ஏப்ரல் 15 முதல் மீண்டும் வாகனக் கட்டுப்பாடு அமல்
தில்லியில் வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வாகனக் கட்டுப்பாட்டு முறை அமல்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வாகனக் கட்டுப்பாட்டு முறை அமல்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒற்றைப் படை-இரட்டைப் படை வாகனக் கட்டுப்பாட்டு முறை கடந்த ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து, இந்த திட்டம், மீண்டும் வரும் ஏப்ரல் மாதம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement