மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்
மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறையில் 3 பேர் பலியாகினர், பலர் காயமுற்றனர்.
மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறையில் 3 பேர் பலியாகினர், பலர் காயமுற்றனர்.
மணிப்பூர் மாநிலம், உக்ருல் மாவட்டத்தின் சில பகுதிகளில் குகி-நாகா சமூகத்தைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய நபர்களிடையே சமீபகாலமாகத் தொடர்ச்சியான மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பலர் பலியாகியுள்ளனர் மற்றும் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் உக்ருல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரு சமூகத்தினரிடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
இதில் 3 பேர் பலியாகினர். பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர். இரண்டு வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. பலியானவர்களில் இருவர் குகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மூன்றாவது நபர் தங்குல் நாகா சமூகத்தைச் சேர்ந்தவர். அதிகாலையில் முல்லம் மற்றும் ஷோங்ஃபால் ஆகிய குகி கிராமங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை குகி மனித உரிமைகள் அறக்கட்டளை கண்டித்துள்ளது.
Advertisement
அதேசமயம், முல்லம் கிராமத்தை தங்குல் நாகா தன்னார்வலர்கள் தாக்கினர் என்ற குற்றச்சாட்டை நாகா கிராமக் காவல் படை மறுத்துள்ளது. ரோந்துப் பணியின் போது குகி ஆயுதக் குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 29 வயது நாகா தன்னார்வலர் ஒருவர் கொல்லப்பட்டார். நான்கு பேர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்தே பதிலடி மோதல் ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த 2023-இல் பெரும் கலவரம் வெடித்த நிலையில், இதுவரையிலான வன்முறைச் சம்பவங்களில் 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடுகளைவிட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கானோா், அரசின் நிவாரண முகாம்களிலேயே தொடா்ந்து தங்கியுள்ளனா்.
சுமாா் ஓராண்டாக குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெற்ற மணிப்பூரில் முதல்வா் யும்நாம் கெம்சந்த் தலைமையிலான பாஜக அரசு கடந்த பிப்ரவரியில் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.