முகப்பு
இந்தியா

சியாச்சினில் இருந்து 9 வீரர்களின் உடல்களையும் தில்லி கொண்டு வர தீவிர முயற்சி

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி பலியான 9 வீரர்களின் உடல்களையும் தில்லி கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Updated On : 13 பிப்ரவரி, 2016 at 4:42 PM
பகிர்:

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி பலியான 9 வீரர்களின் உடல்களையும் தில்லி கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ராணுவ மீட்புக் குழுவின் கடும் முயற்சிக்குப் பின், சியாச்சின் மலையில் இருந்து மலை அடிவாரத்தில் உள்ள ராணுவ முகாமுக்கு 9 வீரர்களின் உடல்களும் இன்று கொண்டு வரப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பர்தாபுர் கிராமத்தில் உள்ள ராணுவ முகாமுக்கு உடல்கள் கொண்டு வரப்பட்டு, அங்குள்ள காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மிக மோசமான வெப்பநிலை காரணமாக ஹெலிகாப்டர்களை இயக்க முடியாததால், உயிரிழந்த வீரர்களின் உடல்களை தில்லி கொண்டு வருவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

ஹெலிகாப்டர்கள் மூலம் உடல்களைக் கொண்டு வர வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட மூன்று முயற்சிகளும் தோல்வி அடைந்தன.

இன்று பருவநிலை ஒத்துழைக்கும் பட்சத்தில், 9 வீரர்களின் உடல்களும் ஞாயிற்றுக்கிழமை லேஹ் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து தில்லி கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருப்பதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.