ஸ்னேப்டீல் ஊழியர் கடத்தலின் பின்னணி என்ன? போலீஸ் பரபரப்பு தகவல்
ஸ்னேப்டீல் நிறுவனத்தின் பெண் ஊழியர் கடத்தப்பட்ட சம்பவத்தில், ஒருதலைக் காதல் தான் காரணம் என்று காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஸ்னேப்டீல் நிறுவனத்தின் பெண் ஊழியர் கடத்தப்பட்ட சம்பவத்தில், ஒருதலைக் காதல் தான் காரணம் என்று காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காஸியாபாத் காவல்துறை அதிகாரி தர்மேந்திரா யாதவ் இது குறித்து கூறுகையில், ஸ்னேப்டீல் நிறுவனத்தின் செயற்குழு அதிகாரியாக இருக்கும் பெண் ஊழியர் கடத்தப்பட்ட சம்பவத்தில், அவரை ஒருதலையாகக் காதலித்த நபர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. பனிபட்டைச் சேர்ந்த தேவேந்திரா என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடத்தலில் உதவி செய்ததாக உறவினர் ஒருவரையும் வழக்கில் சேர்த்துள்ளனர்.
Advertisement
இந்த விவகாரத்தில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில், உள்ள பிரபல தனியார் ஆன்–லைன் வர்த்தக நிறுவனமான ‘ஸ்னாப்டீல்’–ன் நிறுவனத்தில் சட்டத்துறையில் அதிகாரியாக பணியாற்றி வரும் தீப்தி சர்னா, கடந்த 10–ந்தேதி மாலையில் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது கடத்தப்பட்டார்.
ஆட்டோவில் வந்த 4 பேர் தீப்தியை கத்திமுனையில் கடத்திச் சென்றதாக புகார் பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து காசியாபாத் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் தீப்தியை தீவிரமாக தேட தொடங்கினர். மேலும் இது குறித்த தகவல் ஊடகங்களிலும் வெளியாகின. இதையடுத்து அவர் கடந்த வெள்ளிக்கிழமை வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.