இந்தியா

ஜார்க்கண்டில் போலீஸ் நடத்திய என்கவுன்டரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

ஜார்க்கண்ட் மாநிலம் நவாடிஹ் வனப்பகுதியில் இன்று பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் பெண் உட்பட 4 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

PTI

ஜார்க்கண்ட் மாநிலம் நவாடிஹ் வனப்பகுதியில் இன்று பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் பெண் உட்பட 4 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ராஞ்சியில் இருந்து 35 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள காக்ராபேடா கிராமத்தை ஒட்டியுள்ள இந்த வனப்பகுதியில் நேற்று இரவு இந்த துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இரண்டு காவல்துறையினர் சிகிச்சைக்காக ராஞ்சிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தற்போது அவர்கள் நலமடைந்து வருவதாக காவல்துறை கண்காணிப்பாளர் ராஜ் குமார் லக்ரா கூறியுள்ளார்.

காவல்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நக்ஸலைட்டுகளுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதிமுக, மமகவுடன் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சு

பேராவூரணியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

ஜாா்க்கண்ட்: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

இலவச வீட்டுமனை கேட்டு பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT