இந்தியா

ஜாட் போராட்டத்துக்குப் பின்னால் காங்கிரஸ் சதி உள்ளது: பாஜக

இடஒதுக்கீடு கோரி ஜாட் இனத்தவர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்குப் பின்னாள் காங்கிரஸ் கட்சியின் சதி உள்ளது என பாரதீய ஜனதா கட்சி கூறியுள்ளது.

PTI

இடஒதுக்கீடு கோரி ஜாட் இனத்தவர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்குப் பின்னாள் காங்கிரஸ் கட்சியின் சதி உள்ளது என பாரதீய ஜனதா கட்சி கூறியுள்ளது.

ஹரியணா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா வுக்கு நெருக்கமான காங்கிரஸ் பிரமுகர் வீரேந்தர் என்பவர் ஜாட் இனத்தவர் நடத்தி வரும் போரட்டத்தை தூண்டிவிட்டதாக ஒரு 'ஆடியோ டேப்' நேற்று வெளியானது.

இதைச் சுட்டிகாட்டியுள்ள பாரதீய ஜனதா கட்சி, ஜாட் இனத்தவரின் போராட்டத்துக்குப் பின்னாள் காங்கிரஸ் கட்சியின் சதி உள்ளது என குற்றம்சாட்டியுள்ளது.

''ராகுல் காந்தி தனது பிரித்தாளும் அரசியலை கைவிட வேண்டும். ஆட்சி அதிகாரத்தை பெற காங்கிரஸ் விரும்பினால் மக்களிடம் சென்று தாங்கள் செய்துள்ள நல்ல காரியங்களை குறித்து விளக்க வேண்டும். காங்கிரஸ் எங்களுக்கு எதிராக சதி செய்தால் நாங்கள் மக்கள் மன்றத்துக்கு சென்று நீதி கேட்போம்''என பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலர் ஸ்ரீகாந்த் சர்மா கூறினார்.

இதனிடையே வீரேந்தர் பேசியது குறித்து அம்மாநில காங்கிரஸ் கட்சி விளக்கம் கேட்டுள்ளது. அந்த ஒலி நாடாவில் இருப்பது தனது குரல்தான் என்று கூறியுள்ள அவர், ஆனால், பேச்சுகள் மாற்றப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதிமுக, மமகவுடன் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சு

பேராவூரணியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

ஜாா்க்கண்ட்: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

இலவச வீட்டுமனை கேட்டு பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT