இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கு அருகே குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்துக்கு அருகே நராமி நலா என்ற பகுதியில் கைத்துப்பாக்கியுடன் கேட்பாரற்றுக் கிடந்த பாகிஸ்தான் படகை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
அந்த படகு பாகிஸ்தான் மீனவர்களின் படகு என்பது தெரிய வந்துள்ளது. அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளிடம், படகில் இருந்து துப்பாக்கிக் கிடைத்திருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி தெரிவித்தார்.
கட்ச் மாவட்டத்துக்கு அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு 2 செல்போன், மீன்பிடி சாதனங்களுடன் பாகிஸ்தானின் மீனவப் படகு ஒன்று கைப்பற்றப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஒரு படகு கைப்பற்றப்பட்டுள்ளது.
அடிக்கடி மீனவப் படகுகள் இந்திய கடலோரங்களில் கரை ஒதுங்குவது தொடர் கதையாகியுள்ளது. கடந்த 4 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ள 5வது படகு இதுவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.