இந்தியா

இரண்டரை வயது சிறுவனை கடித்து குதறிய சிறுத்தை

ஜார்கண்ட் மாநிலத்தில், வீட்டுக்குள் புதுந்த சிறுத்தை அங்கு உணவு அருந்தி கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தையை இழுத்துச் சென்று கடித்து கொன்றது.

PTI

ஜார்கண்ட் மாநிலத்தில், வீட்டுக்குள் புதுந்த சிறுத்தை அங்கு உணவு அருந்தி கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தையை இழுத்துச் சென்று கடித்து கொன்றது.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மோடிசூர் கிராமத்தில் நேற்று அகில் என்ற இரண்டரை வயது சிறுவன் தனது வீட்டில் உணவு அருந்தி கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த சிறுத்தை அவனை கடித்து, இழுத்து சென்றது.

கிராமத்தினர் சிறுத்தையை தொடர்ந்து துரத்திச் சென்றனர். எனினும், சிறுவனின் பாதி உடல் மட்டுமே மீட்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அக்கிராமத்தினர் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். மனிதனை கொல்லும் அந்த சிறுத்தையை உடனடியாக பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். வனத்துறையினர் அவர்களை சமாதானம் செய்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 32 பேருக்கு ரூ.3.5 கோடி கல்விக் கடன் -ஆட்சியா் இரா.சுகுமாா் வழங்கினாா்

பாசனக் கால்வாய் அமைத்துத் தரக் கோரிக்கை

தென்காசி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் தொடக்கம்

முத்தண்ணன் குளக்கரை டா்ப் மைதானத்தை தனியாா் வசம் ஒப்படைக்கக் கூடாது

இதய தசை நோய் குறித்த பயிலரங்கு

SCROLL FOR NEXT