முகப்பு
இந்தியா

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வை எதிர்த்த வழக்கு: ஜூலை 7-ம் தேதி விசாரணை

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வை எதிர்த்த வழக்கு ஜூலை 7-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Updated On : 4 ஜூலை, 2016 at 3:08 PM
பகிர்:

புது தில்லி: மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வை எதிர்த்த வழக்கு ஜூலை 7-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

நீட் எனப்படும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ஓராண்டு ஒத்திவைக்க அவசரச் சட்டம் ஏற்றப்பட்டது. மேலும் மத்திய அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தை எதிர்த்து ஆனந்தராய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆரம்பத்தில், மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், பின்பு,  அவசரச் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்த மனு குறித்து, மறுபரிசீலனை செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த வழக்கின் விசாரணை மீண்டும் ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.