முகப்பு
இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் கன மழைக்கு 34 பேர் பலி

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தற்போது துவங்கியுள்ள பருவ மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், 34 பேர் பலியாகினர். ஏராளமானோர் வீடுகளை இழந்தனர்.

Updated On : 15 ஜூலை, 2016 at 3:01 PM
பகிர்:

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் தற்போது துவங்கியுள்ள பருவ மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், 34 பேர் பலியாகினர். ஏராளமானோர் வீடுகளை இழந்தனர்.

மத்தியப் பிரதேசத்தில் பருவ மழை துவங்கியதில் இருந்து ஜபால்புரில் 7 பேரும், பன்னாவில் 6 பேரும், போபாலில் 5 பேரும் மழை தொடர்பான அசம்பாவிதங்களில் சிக்கி பலியாகியுள்ளனர்.

கன மழை காரணமாக 2,487 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. 20 ஆயிரம் வீடுகள் லேசான சேதத்தை சந்தித்துள்ளன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.