காசோலை மோசடி: விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட்
காசோலை மோசடி வழக்கில், தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு பிணையில் வெளி வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மும்பை: காசோலை மோசடி வழக்கில், தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு பிணையில் வெளி வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விஜய் மல்லையா கொடுத்த காசோலை, வங்கிக் கணக்கில் பணமில்லாமல் திரும்பி வந்தது தொடர்பாக இந்திய விமானநிலையத் துறை சார்பில், மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விஜய் மல்லையாவுக்கு 3வது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, வங்கிகளில் பெற்ற ரூ.9000 கோடி கடனை திருப்பி செலுத்தாத வழக்கில், விஜய் மல்லையாவுக்கு எதிராக இரண்டு கைது வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement