துருக்கியில் ராணுவப் புரட்சியில் ஈடுபட்ட 754 பேர் கைது
துருக்கியில் ராணுவப் புரட்சியில் ஈடுபட்ட 754 ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்காரா: துருக்கியில் ராணுவப் புரட்சியில் ஈடுபட்ட 754 ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துருக்கியில் மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், அரசைக் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு ராணுவத்தினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து, இராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதோடு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ராணுவத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் அங்காரவில் கலவரங்கள் வெடித்து வருகின்றது.
இந்நிலையில், ராணுவ புரட்சியில் ஈடுபட்ட 754 ராணுவ அதிகாரிகளை போலீசார் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ராணுவ புரட்சியில் ஏற்பட்ட கலவரத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
Advertisement