லஞ்சம் பெற்ற குற்றத்துக்காக தாணே நீதிமன்ற பியூனுக்கு ஒரு ஆண்டு கடுங்காவல்
தாணே மாவட்ட நீதிமன்றத்தில் பியூனாக பணியாற்றி வந்த ராஜூ கக்பாலேவுக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தாணே: தாணே மாவட்ட நீதிமன்றத்தில் பியூனாக பணியாற்றி வந்த ராஜூ கக்பாலேவுக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் ஒருவருக்கு, நீதிமன்ற ஆணையின் நகலை அளிக்க ரூ.800 லஞ்சமாகப் பெற்றதாக வழக்குத் தொடரப்பட்டது.
2008ம் மனுதாரரிடம் இருந்து லஞ்சம் பெற்ற போது, லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கையும் களவுமாக பிடிபட்ட ராஜூ கக்பாலேவுக்கு நீதிபதி வி.வி. பம்பார்டே ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.1000ம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Advertisement