முகப்பு
இந்தியா

கனமழை எதிரொலி: தில்லி - சென்னை விமான சேவை பாதிப்பு

தலைநகர் புது தில்லியில் பெய்து வரும் கன மழை காரணமாக, சென்னை - தில்லி இடையேயான விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 30 ஜூலை, 2016 at 12:34 PM
பகிர்:

சென்னை: தலைநகர் புது தில்லியில் பெய்து வரும் கன மழை காரணமாக, சென்னை - தில்லி இடையேயான விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் பெய்து வரும் மழை காரணமாக சென்னையில் இருந்து புது தில்லி புறப்பட வேண்டிய பல்வேறு விமான சேவை நிறுவனங்களின் விமானங்கள் புறப்பாடு நேரம் மாற்றப்பட்டுள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தில்லியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

Advertisement

இந்த நிலையில், சனிக்கிழமையும் தில்லியில் தொடர்ந்து கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.