முகப்பு
இந்தியா

அதிகாரத்தை சமுதாய வளர்ச்சிக்கு பயன்படுத்த பிரதமர் மோடி வலியுறுத்தல்

பாரதீய ஜனதா கட்சி தற்போது பெற்றுள்ள அதிகாரத்தை சமூக வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

Updated On : 13 ஜூன், 2016 at 6:45 PM
பகிர்:

அலகாபாத் (உத்ர பிரதேசம்): பாரதீய ஜனதா கட்சி தற்போது பெற்றுள்ள அதிகாரத்தை சமூக வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

 பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் உத்ர பிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் நேற்று தொடங்கியது. நிறைவு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

Advertisement

பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த கோடிக்கணக்கான தொண்டர்களின் பல ஆண்டுகளின் கடுமையான உழைப்பால் நாம் இப்போது பலனடைந்து வருகிறோம். மத்தியிலும் பல மாநிலங்களிலும் தற்போது ஆட்சியில் இருக்கிறோம். இந்த அதிகாரத்தால் நாம் பாதிக்கப்படக்கூடாது. இந்த அதிகாரத்தை சமூகத்தின் வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை குறித்து சிந்திக்க வேண்டும்.

தேசத்தை வலுப்படுத்துவதற்கான தேவை உள்ளது. மக்கள், முழக்கங்களால் திருப்தியாவதில்லை. தேசத்தை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து அவர்கள் அக்கறை கொண்டுள்ளனர்.

பாரதீய ஜனதா தொண்டர்கள் சேவை மனப்பான்மை, நடுநிலை, கட்டுப்பாடு, ஒருங்கிணைத்தல், நேர்மறை சிந்தனை, பிறர் குறித்த கரிசணை மற்றும் பேச்சுவாத்தை ஆகிய 7 மந்திரங்களை பின்பற்ற வேண்டும் என்றார் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.