சிம்லா: ஹிமாசல மாநில சாலை போக்குவரத்துக்கழக ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று இரவு முதல் ஈடுபட உள்ளனர்.
8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ஒப்பந்த ஊழியர்களை, நிரந்திர ஊழியர்களாக மாற்றுதல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
ஹிமாச்சல சாலை போக்குவரத்துக்கழகத்துக்கு உட்பட்ட 2,500-க்கு மேற்பட்ட பேருந்துகள் மாநிலத்துக்கு வெளியே இயக்கப்பட்டு வருகின்றது. இதை நிறுத்தக் கோரி கண்டித்தும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.
மேலும், இந்த போராட்டத்துக்கு போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.எஸ் பாலிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.