முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரில் ஹந்த்வாராவில் பதுங்கியிருந்து மேலும் ஒரு பயங்கரவாதி இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

Updated On : 24 ஜூன், 2016 at 10:04 AM
பகிர்:

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் ஹந்த்வாராவில் பதுங்கியிருந்து மேலும் ஒரு பயங்கரவாதி இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

நேற்று இரவு ஹந்த்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் 21 பேர் இணைந்த குழு ஒன்று அப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகளிடையே துப்பாக்கிச் சூடு நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மேலும் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்புப்படை வீரர்கள் இன்று சுட்டுக் கொன்றனர். குப்வாரா மாவட்டம், டோப்வானில் நேற்று 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.