மகாராஷ்டிராவில் துப்பாக்கி முனையில் ஏ.டி.எம் பணம் ரூ.12 கோடி கொள்ளை
மகாராஷ்டிராவில் ஏ.டி.எம். பணம் ரூ.12 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை: மகாராஷ்டிராவில் ஏ.டி.எம். பணம் ரூ.12 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தானேவில் தனியார் ஏ.டி.எம்.யில் பணம் நிரப்புவதற்காக வேனில் ரூ.12 கோடி பணம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, திடீரென அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய மர்ம கும்பல் ஒன்று மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக தானே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement