FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மத சுதந்திரம் குறித்து இந்தியாவில் ஆய்வு: அமெரிக்க குழுவுக்கு விசா மறுப்பு

மத சுதந்திரம் குறித்து இந்தியாவில் ஆய்வு செய்ய விரும்பிய அமெரிக்காவைச் சேர்ந்த குழுவினருக்கு இந்திய அரசு விசா வழங்க மறுத்துவிட்டது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

மத சுதந்திரம் குறித்து இந்தியாவில் ஆய்வு செய்ய விரும்பிய அமெரிக்காவைச் சேர்ந்த குழுவினருக்கு இந்திய அரசு விசா வழங்க மறுத்துவிட்டது.

அமெரிக்காவில் இயங்கி வருகிறது சர்வதேச மதசுதந்திரத்துக்கான ஆணையம். இந்த ஆணையத்தைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் இன்று முதல் இந்தியாவில் பிராயணம் செய்து, மத தலைவர்கள், சமூக அமைப்புகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இந்தியாவில் நிலவும் மதசுதந்திரம் குறித்து ஆலோசனை நடத்தவிருந்தனர்.

இந்நிலையில் அக்குழுவினருக்கு விசா வழங்க இந்திய அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது.

Advertisement

Advertisement

''இந்திய அரசு எங்களுக்கு விசா வழங்காததால் நாங்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளோம்'' என அந்த அமைப்பின் தலைவர் ராப்ர்ட் பி ஜார்ஜ் கூறினார்.

அமெரிக்க அரசுக்கு தோழமையான, பண்முகதன்மை உடைய, குறிப்பிட்ட சமய நம்பிக்கை இல்லாத மற்றும் ஜனநாயக நாடான இந்தியா எங்களுக்கு விசா வழங்கும் என நம்பிக்கை தெரிவித்தார் ஜார்ஜ்.

இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு முதல் சீரழிந்து வரும் மத சுதந்திரம் குறித்து மத குழுக்கள், சமூகவிலாளர்கள், தொண்டு நிறுவனங்கள் அளித்துள்ள அறிக்கையின்படி இந்தியாவுக்கு வந்து ஆய்வு செய்வதற்கு எங்கள் அமைப்பு தொடர்ந்து முயற்சிக்கும் என்றார் ஜார்ஜ்.

சர்வதேச மதசுதந்திர அமைப்புக்கு கடந்த காலங்களில் விசா வழங்கப்படவில்லை. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது உலக அளவிலான மதசுந்திரம் குறித்த ஆண்டறிக்கை தயாரிப்பதற்காக இந்தியா வர விரும்பிய குழுவினருக்கு விசா வழங்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments