தேர்தல் கால சிறப்பு ரயில்கள்: மத்திய அரசு பரிசீலனை
தேர்தல் காலங்களில் வாக்காளர்களின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்குவது குறித்து அரசு பரிசீலிக்கும் என மத்திய ரயில்வே அமைச்சர் கூறினார்.
தேர்தல் காலங்களில் வாக்காளர்களின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்குவது குறித்து அரசு பரிசீலிக்கும் என மத்திய ரயில்வே அமைச்சர் கூறினார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர் ஒருவர் எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளித்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்கா, விழாக் காலங்களில் தேவைக்கேற்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல, தேவைப்பட்டால் தேர்தல் காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றார்.
மத்திய பிரதேசம், பிகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பல வெளி மாநிலங்களில் வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்து செல்கின்றனர். எனினும், மக்களவை அல்லது சட்டப் பேரவைத் தேர்தல்களின் போது வாக்களிப்பதற்காக அவர்கள் சொந்த ஊருக்கே வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக தேர்தல் காலங்களில் தேவைப்பட்டால் சிறப்பு ரயில் இயக்குவதற்கு அரசு பரிசீலனை செய்யும் என்றார் அமைச்சர்.
Advertisement
மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், அந்தோதியா ரயில்களில் சாதாரணக் கட்டணமே வசூலிக்கப்படும். ஆனால், தேஜஸ் மற்றும் ஹம்சஃபர் ரயில்களில் 'தேவைக்கேற்ப கட்டணம்' (தேவை அதிகமாக இருந்தால் கட்டணமும் அதிகமாக இருக்கும்) வசூலிக்கப்படும் என்றார்.