இந்தியா

இமாச்சல் அரசு வழங்கிய பருப்புப் பாக்கெட்டில் எலி: பேரவையில் ஒப்புக் கொண்டார் அமைச்சர் 

இமாச்சலப் பிரதேச அரசின் பொது வழங்கல் துறை விநியோகித்த பருப்புப் பாக்கெட்டில் செத்த எலி இருந்ததை அம்மாநில அமைச்சர் ஜி.எஸ். பாலி ஒப்புக் கொண்டுள்ளார்.

PTI

இமாச்சலப் பிரதேச அரசின் பொது வழங்கல் துறை விநியோகித்த பருப்புப் பாக்கெட்டில் செத்த எலி இருந்ததை அம்மாநில அமைச்சர் ஜி.எஸ். பாலி ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும், அந்த பருப்பு சாப்பிட உகந்ததாக இல்லை என்றும் ஆய்வுச் சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அம்மாநில பாஜக அமைச்சர் ராஜீவ் சைஜால் பேசுகையில், மாநில பொது வழங்கல் துறை வசம் இருந்த 500 பருப்பு மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதில் இரண்டு பாக்கெட்டுகள் மட்டுமே மனிதன் சாப்பிட உகந்ததாக இல்லை என்று கூறப்பட்டதே தவிர, மற்ற பாக்கெட்டுகளில் எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவித்தார்.

எலி இருந்த பருப்பு பாக்கெட், தரம்புரில் உள்ள மொத்தக் கொள்முதல் கிடங்கில் இருந்து பிப்ரவரி 20ம் தேதி விநியோகிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உணவு ஆய்வாளர் விசாரணை நடத்தி வருகிறார் என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரதம்!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

SCROLL FOR NEXT