முன்னாள் துணைவேந்தர் மீது ஊழல் புகார்: விஸ்வபாரதி பல்கலையில் சிபிஐ சோதனை
மேற்குவங்க மாநிலம் சாந்தினிகேதனில் உள்ள உலகப் புகழ்பெற்ற விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் மீதான ஊழல் புகாரினைத் தொடர்ந்து, பல்கலைக்கழகம் மற்றும் அவரது அலுவலகங்களில் இன்று சிபிஐ சோதனை நடைபெற்றது.
புது தில்லி : மேற்குவங்க மாநிலம் சாந்தினிகேதனில் உள்ள உலகப் புகழ்பெற்ற விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் மீதான ஊழல் புகாரினைத் தொடர்ந்து, பல்கலைக்கழகம் மற்றும் அவரது அலுவலகங்களில் இன்று சிபிஐ சோதனை நடைபெற்றது.
இன்று காலை துணை வேந்தரின் அலுவலகம் உட்பட 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
முன்னாள் துணை வேந்தர் தனது பதவிக் காலத்தில், பல்கலை மானியக் குழுவின் விதிகளைப் பின்பற்றி பணி நியமனங்கள் நடைபெறவில்லை என்று ஊழல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement