ஐநூறு, ஆயிரம் ருபாய் நோட்டுகளுக்கான தடையால் பாகிஸ்தானுக்கு ரூ. 500 கோடி இழப்பு?
இந்திய பிரதமர் மோடி, ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகள் நேற்றிரவு முதல் செல்லாது என்று செய்த அறிவிப்பின் காரணமாக, கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடும் பாகிஸ்தானுக்கு ரூ. 500 கோடி இழப்பு ...
இந்தியாஐநூறு, ஆயிரம் ருபாய் நோட்டுகளுக்கான தடையால் பாகிஸ்தானுக்கு ரூ. 500 கோடி இழப்பு?
இந்திய பிரதமர் மோடி, ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகள் நேற்றிரவு முதல் செல்லாது என்று செய்த அறிவிப்பின் காரணமாக, கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடும் பாகிஸ்தானுக்கு ரூ. 500 கோடி இழப்பு ...
புதுதில்லி: இந்திய பிரதமர் மோடி, ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகள் நேற்றிரவு முதல் செல்லாது என்று செய்த அறிவிப்பின் காரணமாக, கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடும் பாகிஸ்தானுக்கு ரூ. 500 கோடி இழப்பு என்று தகவல் வெளியாகி உள்ளது.
நமது அண்டை நாடான பாகிஸ்தான் இந்திய ரூபாய் நோட்டுகளை போலியாக தயாரித்து இந்தியாவுக்குள் பரவச செய்கிறது. இதன் மூலம் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு சுமார் ரூ. 500 கோடி வருவாய் கிடைக்கிறது என்று இந்திய உளவுத்துறை, ’ரா,’ வருவாய் புலனாய்வுத்துறை மற்றும் சிபிஐ இயக்குநரகம் ஆகிய அமைப்புகளின் தகவல்களின்படி தெரிய வந்துள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு மட்டும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் வந்த போலி ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ. 1,600 கோடியாகும் என்று உளவு அமைப்புகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்திய அரசு விதித்துள்ள தடையின் காரணமாக பாகிஸ்தானுக்கு ரூ. 500 கோடி இழப்பு உண்டாகும் என்று தெரிய வருகிறது.