இந்தியா

ஷீலா தீட்சித்தின் மருமகனுக்கு 2 நாள் போலீஸ் காவல்

தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மருமகனை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

PTI


புது தில்லி: தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மருமகனை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மனைவியின் சொத்துக்களை அபகரித்தல், முறைகேட்டில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷீலா தீட்சித்தின் மகள், தனது கணவர் குடும்ப வன்முறையில் ஈடுபடுவதாகக் கூறி காவல்நிலையத்தில் அளித்த புகாரினைத் தொடர்ந்து நவம்பர் 11ம் தேதி சையது மொஹம்மது இம்ரான் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.

தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இம்ரான், கைப்பற்றிய பொருட்களை பறிமுதல் செய்ய 2 நாள் போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி காவல்துறை அனுமதி கேட்டது.

இதனை ஏற்று தில்லி நீதிமன்ற நீதிபதி பங்கஜ் ஷர்மா, இம்ரானை நவம்பர் 17ம் தேதி வரை 2 நாட்கள் போலிஸ்காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக்யராஜ் செய்த துரோகம்... கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்த சுந்தர்ராஜன்!

நல்லகண்ணு மறைவு : தலைவர்கள் இரங்கல்

டி20 உலகக் கோப்பையில் ஹாரி புரூக் படைத்த உலக சாதனை!

நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!

மக்கள் அஞ்சலிக்காக சென்னை தி. நகர் இந்திய கம்யூ. அலுவலகத்தில் நல்லகண்ணு உடல் வைக்கப்படுகிறது!

SCROLL FOR NEXT