கெஜ்ரிவால் மீதான அவதூறு மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு!
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தன் மீது தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தில்லி முதல்வர் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
புதுதில்லி: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தன் மீது தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தில்லி முதல்வர் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தில்லி கிரிக்கெட் சங்கத்தில் ஜெட்லி தலைவராக இருந்த போது,நிதி முறைகேடுகள் நடந்ததாக, அவர் மீது தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து கெஜ்ரிவால் மீது அருண்ஜெட்லி ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு சிவில் மற்றும் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த அவதூறு வழக்குக்கு தடை விதிக்க கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு டெல்லி உயர்நீதி மன்றத்தில் கடந்த மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த மனுவை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது.