முகப்பு
இந்தியா

தலித்துகள் மீதான தாக்குதல்களால் அவமானத்தில் தலை குனிகிறேன்: பிரதமர் மோடி 

தலித் சகோதரர்கள் மீது நடக்கும் தாக்குதல் சம்பவங்கள் பற்றி கேள்விப்படும்போது எனது தலை அவமானத்தால் தொங்குகிறது என்று பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:46 AM
பகிர்:

லூதியானா: தலித் சகோதரர்கள் மீது நடக்கும் தாக்குதல் சம்பவங்கள் பற்றி கேள்விப்படும்போது எனது தலை அவமானத்தால் தொங்குகிறது என்று பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பட்டியல் மற்றும் பழங்குடியின வகுப்பியனார் பயன்பெறும் வகையில்  மத்திய சிறுகுறு நடுத்தர தொழில்துறையின் முயற்சியில் தேசிய எஸ்.சி.,எஸ்.டி. மையம்  ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரூ.490 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

சமுதாயத்தில் நிலவும் முரண்பாடு காரணமாக, நமது தலித் சகோதரர்கள் மீது இன்றும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. இதைக் கேள்விப்படும்போது எனது தலை அவமானத்தால் தொங்குகிறது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும் நாம் காத்திருக்கக்கூடாது.

நாம் நமது இலக்கை நோக்கிய கவனத்தை இன்னும் கூர்மைப்படுத்த வேண்டும். தலித் அல்லது பழங்குடியின மக்களின் விருப்பங்கள் நாட்டின் மற்ற இளைஞர்களை விஞ்சும் அளவுக்கு உள்ளது. அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், சிறந்த நிலையை எட்டுவார்கள்.

தலித் மற்றும் பழங்குடியினர் தொழிலதிபர்களாக உருவாக இந்த மையமானது உதவி செய்யும். அதன்மூலம் அவர்கள் மற்றவர்களுக்கு வேலை வழங்க முடியும். தலித் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களிடம் இருந்து மாநில அரசுகள் 4 சதவீத உற்பத்திப் பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும்.

இவ்வாறு மோடி பேசினார்.

முழு கட்டுரையைப் படிக்க →