புவனேஸ்வர்: எஸ்யுஎம் மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்தில் 21 பேர் பலியான சம்பவத்தை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்ற மனித உரிமைகள் ஆணையம் ஒடிசா அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
எஸ்யுஎம் மருத்துவமனை தீ விபத்து குறித்து 6 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி கூறி மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், தீ விபத்துக்கான காரணம், தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்பட்ட இழப்பீடு மற்றும் நிவாரணம் குறித்தும் 6 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.