இந்தியா

சந்திரபாபு நாயுடுவின் மகனை விட ஒன்றரை வயது பேரன் பணக்காரன்: அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா

DIN


ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனை விட, அவரது 18 மாதப் பேரனின் சொத்து அதிகம் என்று தெரிய வந்துள்ளது.

சந்திரபாபு நாயுடு, தனது குடும்பத்தாரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை நேற்று வெளியிட்டார். இந்திய அரசியல்வாதிகளிலேயே, தான் மட்டுமே, தனது மற்றும் தன் குடும்பத்தாரின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்து முழு விவரத்தையும் தொடர்ந்து 6 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி வெளியிடப்பட்டுள்ள சொத்து மதிப்பு விவரத்தில், சந்திரபாபு நாயுடு குடும்பத்தாரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.74 கோடி. இதில் சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ.3.73 கோடி சொத்தும், ரூ.3.06 கோடி கடனும் உள்ளது.

இதில் மிகவும் விநோதமான விஷயம் என்னவென்றால், சந்திரபாபு நாயுடுவின் 18 மாத பேரன் லோகேஷ், தனது தந்தை மற்றும் தாத்தாவை விட பணக்காரனாக இருப்பதுதான். அதாவது, லோகேஷுக்கு ரூ.9.17 கோடி மதிப்பிலான வீடு, வங்கியில் முதலீடு, வங்கிக் கணக்கில் ரூ.2.31 கோடி பணம் என மொத்தம் ரூ.14 கோடி அளவுக்கு சொத்து இருக்கிறதாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

நாளை நடைபெற இருந்த பாஜக ஆலோசனைக் கூட்டம் ரத்து

மானும் நீயே மயிலும் நீயே

SCROLL FOR NEXT