மூன்று நாள் பயணமாக நேபாள பிரதமர் இந்தியா வருகை!
மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா இந்தியா வந்தார்.
மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா இந்தியா வந்தார்.
நேபாளத்தின் புதிய பிரதமராக பிரசந்தா கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இந்திய பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் அவர் இன்று இந்தியா வந்துள்ளார். அவருடன் அவரது மனைவி சீதா தஹலும் வருகை தந்துள்ளார். விமான நிலையத்தில் அவரை மத்திய வெளி விவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வரவேற்றார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்க உள்ள அவர் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார். அதைத் தொடர்ந்துஅவர் குடியரசுத்தலைவர் பிரணாப் மற்றும் மத்திய அமைச்சர்களையும் சந்தித்துப் பேச உள்ளார்.