இந்தியா

ஜைன துறவிகளுடன் பலூசிஸ்தான் விடுதலைப் போராட்டத் தலைவர் சந்திப்பு

DIN

பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற போராடிக்கொண்டிருக்கும் பலூசிஸ்தான் மாகாணத்திலிருந்து இந்தியா வந்துள்ள முக்கியமான அரசியல் தலைவர், உத்தரப் பிரதேச மாநிலம், பாக்பத் மாவட்டத்தில் ஜைன மதத் துறவிகளை சந்தித்து ஆசி பெற்றார்.
பலூசிஸ்தான் விடுதலைக்காக போராடி வருபவர் மீர் மஸ்தாக் தில்ஷத் பலூச். உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு வந்த அவர், அங்குள்ள ஜைன துறவிகளை சந்தித்து ஆசி பெற்றார்.
இந்தியவில் ஆய்வுக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் அமித் ராய் ஜெயினும் அவருடன் இருந்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் மீர் மஸ்தாக் தில்ஷத் பலூச் கூறுகையில், "பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வெறும் முகம் மட்டுமே. பாகிஸ்தான் அரசை ராணுவமே நடத்தி வருகிறது' என்றார்.
அமித் ராய் கூறுகையில், "தாங்கள் பலூசிஸ்தானில் படும் கஷ்டங்களையும், எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் ஜைன துறவிகளிடம் பலூச் எடுத்துரைத்தார். பலூசிஸ்தான் விடுதலைப் போராட்டம் வெற்றி பெற ஜைன துறவி ஆசார்ய சுபத்ர முனிஜி மகராஜிடம் ஆசி பெற்றுச் சென்றார்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT