பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுக்கு (88) திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது அனைத்து அலுவல்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக முதல்வர் அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
பாதலின் உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஓய்வில் இருக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளனர். எனவே, தனது ஜலந்தர் பயணத்தை முதல்வர் ஒத்திவைத்துள்ளார் என்றார்.
எனினும், பாதலுக்கு எந்த வகையான உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்த விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.