இந்தியா

பதான்கோட்டில் ஆயுதங்களுடன் புகுந்த நான்கு மர்ம நபர்கள்? தீவிர தேடுதல் வேட்டை!

DIN

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் ஆயுதங்களுடன் நான்கு மர்ம நபர்கள் புகுந்ததாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர்  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில், நேற்று ஆயுதம் தாங்கிய நான்கு மர்ம நபர்கள் நடமாடியதாக, உள்ளூர் கிராமவாசிகள் பாதுகாப்பு படைகளுக்கு தகவல் கொடுத்தனர்.  இதை அடுத்து அவர்களை தேடி தீவிர தேடுதல் வேட்டை தொடங்கியது.

இது பற்றி பதான்கோட் மாவட்ட காவல்துறை தலைவர் ராகேஷ் கவுஷல் கூறியதாவது:

நங்கள் சக்கி நதி மற்றும் அதனை சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில்  தேடுதல் வேட்டையை நடத்தினோம். இதுவரை எதுவும் முன்னேற்றம் இல்லை. யாரும் கைது செய்யப்படவில்லை. செவ்வாயன்று தொடங்கிய தேடுதல் வேட்டை இரவு முழுவதும் தொடர்ந்தது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

இந்த வருட துவக்கத்தில் ஜனவரி 2-ஆம்  தேதி பதான்கோட் ராணுவ விமான தளத்தில்  பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கக் கோரிக்கை

வேளாண் சிறப்பு அதிகாரி பணி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு

‘முதல்வரின் மாநில இளைஞா் விருது’: மே 1-15 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு

போா் நிறுத்த திட்டத்துக்கு ஒப்புதல்: ஹமாஸிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

வாழைத்தாா் உறையிடுதல்: வேளாண் மாணவா்கள் செயல்விளக்கம்

SCROLL FOR NEXT