இந்தியா

ஏர்செல்-மேக்சிஸ்: ப.சிதம்பரத்தின் பங்கு என்ன? அமலாக்கத் துறை விசாரணை

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பங்கு குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

DIN

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பங்கு குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இதுதொடர்பாக, அந்தத் துறை வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் வெளிநாட்டு முதலீடுகள் மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் வழங்கப்பட்டதில் ப.சிதம்பரத்தின் பங்கு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு முதலீடு சுமார் ரூ. 3,500 கோடி ஆகும். அரசு விதிகளின்படியும், வெளிநாட்டு முதலீடுகள் மேம்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின்படியும் ரூ. 600 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டு முதலீடுகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவே ஒப்புதல் அளிக்க வேண்டும். எனினும், இதை மீறும்வகையில் ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, 'சிபிஐ தரப்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, சிபிஐ தனது விசாரணை நிலவர அறிக்கையை தாக்கல் செய்தது. இதேபோல், அமலாக்கத் துறையும் தனது விசாரணை நிலவர அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

SCROLL FOR NEXT