இந்தியா

உ.பி. கோயிலில் பக்திப் பாடல்களைப் பாடிய ம.பி. முதல்வர்!

DIN

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிருந்தாவன் கோயிலுக்குச் சென்றிருந்த மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், பக்திப் பாடல்களைப் பாடி அங்குள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோயில்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, பிருந்தாவனில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற பிரியாகாந்த் ஜூ கோயிலுக்கு சனிக்கிழமை மாலை அவர் சென்றார்.
அப்போது, அந்தக் கோயிலில் நடைபெற்ற சிறப்புப் பூஜைகளில் சௌஹான் கலந்து கொண்டார். பின்னர், கோயிலில் பஜனைக் குழுவினரால் நடத்தப்பட்ட கச்சேரியையும் அவர் பார்வையிட்டார்.
அப்போது, திடீரென பக்தி பரவசப்பட்டவராக மேடை ஏறிய சௌஹான், அங்கிருந்தவரிடம் மைக்கை வாங்கி பஜனைப் பாடல்களை பாடத் தொடங்கினார். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவர், கோயிலில் சாதாரண மனிதரைப் போல பஜனைப் பாடல்களை பாடியது அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி நள்ளிரவில் டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT