இந்தியா

கோரக்பூர் மருத்துவமனையில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 290 குழந்தைகள் மரணம்

DIN


கோரக்பூர்: கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில், இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 290 குழந்தைகள் மரணம் அடைந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி மாதத்தில் இருந்து இன்றைய தேதி வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 1,250 குழந்தைகள் மரணம் அடைந்ததாகவும் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பி.கே. சிங் தெரிவித்தார்.

உயிரிழந்த குழந்தைகள் குறைப்பிரசவம், குறைந்த எடை, மஞ்சள்காமாலை, தொற்றுநோய்கள் என பல்வேறு உடல்நிலைக் கோளாறுகளுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், உயிரிழந்த பல குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மரணம் அடைந்த குழந்தைகளில் பலர், விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தால் உயிர்பிழைத்திருக்க வாய்ப்புண்டு என்றும் பி.கே. சிங் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

SCROLL FOR NEXT