முகப்பு
இந்தியா

கார், பைக் மீது மோதிய பேருந்து: தந்தை- மகன் உட்பட 4 பேர் பலி

கேரள மாநிலம் கொச்சியில் இன்று அதிகாலை, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, கார் மற்றும் பைக் மீது மோதியதில் 4 பேர் பலியாகினர்.

Updated On : 2 ஜனவரி, 2017 at 10:52 AM
பகிர்:

கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் இன்று அதிகாலை, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, கார் மற்றும் பைக் மீது மோதியதில் 4 பேர் பலியாகினர்.

வரப்புழா மேம்பாலம் அருகே இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் பலியானவர்களின் அடையாளம் காணப்பட்டுள்ளது.

விபத்தில் பலியான ஹரிசங்கர், தனது மகன் கிரணுடன் பைக்கில் வந்த போது விபத்தில் சிக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். கொச்சின் பல்கலை மாணவர்களான அக்ஷய் மற்றும் ஜிஜிஷா காரில் வந்த போது விபத்தில் சிக்கி பலியாகினர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.