புதுதில்லி: தேசிய விமான சேவை நிறுவனமான 'ஏர் இந்தியா'வின் உள்ளூர் விமான சேவைகளில் இனி அசைவ உணவு வழங்கப்பட மாட்டாது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஏர் இந்தியா'வின் உள்ளூர் விமான சேவைகளில் 'எகானாமி' பிரிவு பயணிகளுக்கு இனி அசைவ உணவு வழங்கப்பட மாட்டாது என்ற உணர்வுப்பூர்வமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் செலவு மற்றும் உணவுப்பொருள் மிச்சமாவதை குறைத்து, ஏர் இந்தியா நிறுவன சமையல் சேவையில் தரத்தினையு உயர்த்தலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது