இந்தியா

ஜம்மு-காஷ்மீர் வங்கியில் ரூ.5 லட்சம் கொள்ளையடித்த தீவிரவாதிகள்

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அர்வானி எனுமிடத்தில் அம்மாநில வங்கிக் கிளை செயல்படுகிறது.

இங்கு புகுந்த தீவிரவாதிகள் ரூ.5 லட்சத்துக்கும் மேலான பணத்தை திங்கள்கிழமை கொள்ளையடித்துச் சென்றனர்.

அதுபோல ஜூலை 11-ந் தேதி இமாம் சாஹிப் என்ற இடத்தில் அமைந்துள்ள ஜம்மு-காஷ்மீர் வங்கிக் கிளையில் கொள்ளை முயற்சி மற்றும் ஆயுத கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட 3 கொள்ளையர்களை சோஃபியன் நகர காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், கடந்த ஜூன் 7-ந் தேதி இதேபோன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வான்பூரா என்ற மாவட்டத்தில் உள்ள புல்வாமா என்ற இடத்தில் அமைந்துள்ள வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், அங்கிருந்த பாதுகாவலர்களால் அந்தக் கொள்ளைச் சம்பவம் வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது.

சமீபகாலமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் உள்ளிட்டோரால் இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவதாக அங்குள்ள காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT