இந்தியா

இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக்கு தடை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மாட்டிறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு குறித்து விளக்கம் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

DIN

புது தில்லி: மாட்டிறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு குறித்து விளக்கம் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

மேலும், இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு வெளியிட்ட அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஐதராபாத்தைச் சேர்ந்த தனியார் அமைப்பு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இறைச்சிக்கக மாடு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அகர்வால், எஸ்.கே கவுல் அடங்கிய விடுமுறை கால அமர்வு, இது  குறித்து 2 வாரத்தில் பதிலளிக்குமாறு  மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இதையடுத்து வழக்கு விசாரணை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 தேர்தலில் இபிஎஸ்தான் முதல்வர்: நயினாா் நாகேந்திரன்

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

SCROLL FOR NEXT