ஹிமாசலப் பிரதேச மாநிலம், கங்ரா மாவட்டத்தில் சுற்றுலா பேருந்து ஒன்று சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் 10 பேர் உயிரிழந்தனர். 55 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸ் நகரிலிருந்து கங்ரா மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற கோயில் ஒன்றுக்கு பேருந்தில் சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தனர்.
தலியரா பகுதி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த பள்ளத்தில் அந்தப் பேருந்து கவிழ்ந்தது.
இதில், 10 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 55 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.