முகப்பு
இந்தியா

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த நிலைப்பாட்டை அதிமுக தலைமைக் கழக முடிவு செய்யும்: தம்பிதுரை 

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த நிலைப்பாட்டை அதிமுக தலைமைக் கழக முடிவு செய்யும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துளளார். 

Updated On : 16 ஜூன், 2017 at 1:09 PM
பகிர்:

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த நிலைப்பாட்டை அதிமுக தலைமைக் கழக முடிவு செய்யும் என்று துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துளளார். 

மத்தய அமைச்சர் வெங்கையா நாயுடுவை, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று தில்லியில் சந்தித்துப் பேசினார். 

பின்னர் செய்தயாளர்களிடம் பேசிய தம்பிதுரை, 
மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த நிலைப்பாட்டை அதிமுக தலைமைக் கழக முடிவு செய்யும். முதல்வர், மூத்த அமைச்சர்கள் கூடி விரைவில் முடிவெடுப்பார்கள். யாருக்கு அதிமுக ஆதரவு என்பது குறித்த அறிவிப்பு சில நாட்களில் வெளியாகும் என்று இவ்வாறு அவர் கூறினார். 

Advertisement

இதனிடையே குடியரசுத் தலைவர் பொதுவேட்பாளர் தொடர்பாக வெங்கையா நாயுடுவுடன் துணை சபாநயகர் தம்பிதுரை ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.